கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தேர்தல் முடிந்த நிலையிலும் அவர் வெற்றி பெற்றுள்ள நிலையிலும் நிறைவேற்றுவதற்கு முன்வருவாரா?
பதில்: தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தேர்தல் முடிந்தபின் நிறைவேற்றுவதுதான் நியாயமான நாணயமான ஜனநாயகமாக இருக்க முடியும். அதிலும் குறிப்பாக ராஜபக்சே இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தவறினாலும் தாமதப்படுத்தினாலும் தி.மு.க. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இங்குள்ள கழக அரசின் சார்பாக இந்தியப் பேரரசை வலியுறுத்தி ஆவன செய்யத் தயங்காது.
கேள்வி: பொன்சேகாவை இலங்கை அதிபர் ராஜபக்சே கைது செய்து வைத்திருப்பதும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப் போவதாக செய்திகள் பரவுவதும் பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில்: இலங்கை வரலாற்றில் அந்த காலத்திலும், இந்த காலத்திலும் யார் யாரெல்லாம் பழி வாங்கப்பட்டார்கள், கொலையுண்டார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். அதே நேரத்தில் இந்திய வரலாற்றில் அலெக்சாண்டரிடம் தோல்வியுற்ற புருஷோத்தம மன்னனை, அலெக்சாண்டர் எப்படி நடத்தினார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்தச் சரித்திரக் குறிப்பை இலங்கையிலே உள்ள ஆட்சியாளர்கள் மறந்திருக்க நியாயமில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த தொழில்நுட்ப காலத்தில் தினமும் ஒரு கண்டுபிடிப்பு வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது
அந்த வகையில் இப்போது சட்டைப்பட்டனில் மறைந்திருக்கும் கேமிரா வந்துள்ளது இதைப்பற்றி தான் இந்த பதிவு.
நாம் அணியும் சட்டையில் பட்டனை எடுத்துவிட்டு அதற்கு பதில் கேமிரா பட்டனை வைத்துவிடுகின்றனர் பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. சில முக்கியமான அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை யாரும் தெரியாத வண்ணம் படம் பிடித்துவிடுகின்றனர்.
இந்த கேமிரா மூலம் 720×480 பிக்சல் அளவு காட்சிகளை படமெடுக்க முடியும் ஒரு செகண்டுக்கு 30 பிரேம் என்ற வகையில் உள்ளது, தொடர்ச்சியாக 70 நிமிடம் வரை படம் பிடிக்க முடியும். 16GB மெமரியுடன் இந்த கேமிரா வெளிவந்துள்ளது, இந்த கேமிராவில் நாம் சேமிப்பதை உடனடியாக USB கேபிள் மூலம் கணினியில் ஏற்றலாம். இந்த கேமிரா பட்டன் எப்படி இருக்கும் என்பதை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளோம்.
ஒரு உயர்நிலை அதிகாரி தனக்கு கீழ் வேலை பார்க்கும் நபர்களிடம் காட்டுமிராண்டி தனமாக நடப்பதையும் கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவர்களை திட்டுவதியும் இனி மறைவாக எடுக்கலாம் என்று இதன் வெளியீட்டு விழாவில் பலர் கூறியிருந்தனர். செய்தி சேகரிப்பாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான்.
என்ன தான் நல்லதிற்காக பயன்படுத்தினாலும் இதனை தவறாக பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் அதனால் நாம் எப்போதும் முகம் தெரியாத நபர்களிடம் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது தான் நம் நோக்கம்.